Tuesday, March 15, 2022

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செய்துவிட்டால், அவர்களுக்கு அனுக்ரஹ ஶக்தி வந்துவிடும் என்பதை இந்த ஸம்பவம் உணர்த்துகிறது. பந்தநல்லூர் ஸ்ரீ பந்தாடு நாயகி ஸமேத பஶுபதிநாதர் கோவிலில் உள்ள துர்க்கை, பக்தர்களை ஈர்த்தாள்!
எப்படி? ......



 


 

 

 

 

 

அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் ஓரமாக கஸிந்து கொண்டே இருந்தது. பக்தர்களும் இதை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அம்பாளுக்கு அபிஷேக, அலங்காரங்கள் செய்யும் ஶிவஸ்ரீ ஜகதீஶ ஶிவாச்சார்ய குருக்கள் அவளுடைய கண்களை பதமாக துடைத்து விட்டாலும் அது நின்றபாடில்லை! கண்களின் ஓரத்தில் கண்ணீர் கஸிவு தெரிந்தது. அவருடைய மனஸும் மிகவும் வேதனைப் பட்டது.
"அம்மா! உனக்கே ஏன் இந்த வேதனை?..."

ஒரு கன்னியாப் பெண்ணை துர்க்கையாக பாவித்து, ஆராதனை செய்து, அவளுக்கு ஸௌபாக்ய த்ரவ்யங்களை ஸமர்ப்பித்தார். பிறகு நவாக்ஷரி மந்த்ர ஜபம் செய்தார். பிறகு துர்க்கையாக ஆராதனை செய்யப்பட்ட பெண்ணின் முன்னால் அமர்ந்து கொண்டு, "அம்மா! என்ன குறை? ஏன் இந்தக் கண்ணீர்?" தாயிடம் கெஞ்சிக் கேட்டார்.

அந்தப் பெண்ணும் ஏதோ ஒருவித 'trans'ல் இருந்தாள். இவர் இப்படிக் கேட்டதும், அந்தப் பெண் சொன்னாள். "பச்சை நிறத்தில் பாவாடை கட்டிண்டு தெய்வீகமான அழகோட ஒரு பொண்ணு, "என்னோட சுமையை குறை" ன்னு சொல்லிட்டு மறைஞ்சு போய்ட்டா....." பிறகு கோவிலில் அந்த விஷ்ணு துர்க்கைக்கு, விஸேஷமான அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டதும் கண்ணீர் வருவது நின்றுவிட்டது. ஆனாலும், துர்க்கைக்கு உண்டான சுமை என்ன?....பதில் கிடைக்கவில்லை.

"எதுன்னாலும் நா.....இருக்கேன்" என்று சொல்லாமல் அனுக்ரஹம் செய்யும் பெரியவா இருந்த காஞ்சிக்கு போனார் ஶிவாச்சாரியார். பெரியவாளை தர்ஶனம் பண்ணிவிட்டு, துர்க்கையம்மனைப்பற்றி கூறினார்.

"எங்க ஊர் கோவில்ல விஷ்ணு துர்க்கைக்கி, கண்ணுலேர்ந்து நீரா வழிஞ்சது. அம்பாள் "என்னோட சுமையை குறை"ன்னு சொல்லிட்டு மறைஞ்சுட்டா! அப்றம் விஸேஷமா அபிஷேக ஆராதனைகள் பண்ணினோம். இப்போ ஸெரியாயிடுத்து. ஆனா, பெரியவாதான் அம்பாளுக்கு என்ன சுமை-ங்கறதை சொல்லணும்."

"இவர்ட்ட 25 லிட்டர் கங்காஜலத்தை குடு" பாரிஷதரிடம் உத்தரவிட்டார். கங்கா ஜலம் வந்தது. "25 லிட்டர் கங்கா ஜலத்ல, லக்ஷம் ஆவ்ருத்தி நவாக்ஷரி மந்த்ரத்தை உருவேத்துங்கோ! அப்றம் அந்த ஜலத்தால, அம்பாளுக்கு அபிஷேகம் பண்ணிட்டு, எங்கிட்ட வாங்கோ....!" ஶிவாச்சார்யார் கங்கா ஜலத்துடன் ஊருக்கு வந்தார்.....

நாலு மாஸங்களில் லக்ஷம் நவாக்ஷரி உருவேற்றிய கங்கா ஜலத்தைக் கொண்டு பெரியவா சொன்ன மாதிரி அம்பாளுக்கு அபிஷேகம் முடித்துவிட்டு, ஓரிக்கையில் வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணினார். "பெரியவா சொன்னபடி பண்ணிட்டோம்...." பெரியவா கொஞ்சநேரம் மௌனமாக இருந்தார். "துர்க்கையோட ஶிரஸுக்கு மேல, மண்டபம் இடிக்கறதான்னு பாருங்கோ" அடடா! அத்தனை நாட்கள் தினமும் பூஜை செய்தும், தான் இதை கவனிக்கவில்லையே! என்று நினைத்தார். "கவனிக்கல பெரியவா..! ஊருக்குப் போய்ப் பாத்துட்டு வரேன்"

ஊருக்கு வந்ததும், முதல் வேலையாக, அம்பாளின் தலைக்கு மேலே ஒரு கெட்டியான நூலை விட்டுப் பார்த்தால்! பெரியவா.....சொன்னதுபோல், மேல்கூரை அம்பாளின் ஶிரஸின் மேல் பட்டுக் கொண்டிருந்ததால், நூலை அடுத்த பக்கம் கொண்டுபோக முடியவில்லை! எப்படி மேற்கூரை அம்பாள் தலை மேல் இறங்கியது? சுவரில் ஏற்பட்ட ஏதோ விரிசலால், மேற்கூரை கொஞ்சம் ஸாய்ந்து, அம்பிகையின் தலைமேல் பட்டுக் கொண்டிருந்திருக்கிறது! உடனே பெரியவாளிடம் ஓடினார். மேல்கூரை அம்பாள் தலைமேல் இறங்கியிருப்பதை சொன்னார்.

"துர்க்கையோட செலையை வெளில எடுத்துட்டு, அம்பாளோட ஶிரஸுக்கு மேல இடிக்கற அந்த கூரையை லேஸா கொடைஞ்சுட்டு, மறுபடியும் அம்பாளை அங்கியே ப்ரதிஷ்டை பண்ணிட்டு, ஒரு கும்பாபிஷேகம் பண்ணிடுங்கோ!" பஹு ஸுலபமான தீர்வைக் கூறி அனுக்ரஹித்தார்.....

பெரியவா உத்தரவுப்படி எல்லாவற்றையும் செய்துவிட்டு 1987-ல் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடந்தது. ப்ரஸாதத்தோடு பெரியவாளை தர்ஶனம் பண்ண ஶிவாச்சாரியார் சென்றார். அழகாக சிரித்துக் கொண்டே ப்ரஸாதத்தை ஸ்வீகரித்துக் கொண்டே....

"ஒங்க ஊர் ஜனங்கள்..... ரொம்ப பாக்யசாலிகள்! அம்பாள் அழுதது, எல்லாருக்கும் அனுக்ரஹம் பண்றதுக்குத்தான்..!!" பெரியவா பேசிக்கொண்டிருக்கும் போதே, ஒரு குஜராத்தி பக்தர் வந்தார். அவரிடம் ஏதோ ஹிந்தியில் பேசிவிட்டு, ஶிவாச்சார்யாரிடம்,

"இங்க வந்துட்டுப் போறதுக்கு...ஒங்களுக்கு என்ன செலவாகும்?" "300 ரூவா ஆகும் பெரியவா"

"இவர் கைல 300 ரூவா குடு.." அந்த குஜராத்திக்காரரிடம் சொன்னதும், அவருக்கோ இதை பெரிய பாக்யமாக எண்ணி பரம ஸந்தோஷம்!

பெரியவாளுக்கு கோவில் குருக்கள், ஶிவாச்சார்யாகள் ஆகியோரின் க்ஷேமத்தில் மிகுந்த கருத்து உண்டு. துர்க்கையின் தலைச் சுமையோடு, ஶிவாச்சாரியாரின் மனச்சுமையையும் போக்கி விட்டார்! இல்லாவிட்டால்,

இப்படியொரு வழிகாட்ட, யாரால் முடியும்? பெரியவாளைத் தவிர....

பெரியவா சரணம்!

Thursday, August 26, 2021

"லங்கணம் பரம ஔஷதம்" "டாக்டர் கொடுத்தது ஔஷதம். நான் பரம ஔஷதத்தில் இருக்கேன்!"என்று லங்கணத்துக்கு விளக்கம் சொன்ன பெரியவாள். காஞ்சி மகாபெரியவா அற்புதங்கள், Periyavacharanam

 "லங்கணம் பரம ஔஷதம்"  "டாக்டர் கொடுத்தது ஔஷதம். நான் பரம ஔஷதத்தில் இருக்கேன்!"என்று லங்கணத்துக்கு விளக்கம் சொன்ன பெரியவாள். 

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன் 

நதியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்தார்கள் பெரியவா. 

கடுமையான காய்ச்சல் வந்து விட்டது. உடம்பில் அனல் பறந்தது. டாக்டர் வந்து பார்த்தார். 

மாத்திரை கொடுத்து, "உடனே பால் சாப்பிட்டு விட்டு, மாத்திரைகளை போட்டுக் கொள்ள வேண்டும்" என்றார்.

 அன்றைய தினம், ஏகாதசி, சுத்த உபவாசம்,தண்ணீர் கூடப் பருகுவதில்லை என்னும் போது பாலைச் சாப்பிடலாமா? "இன்னிக்குப் பாலும் வேண்டாம்...மாத்திரையும் வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்கள் பெரியவாள் 

ஏஜெண்ட் மானேஜர் வந்து கெஞ்சினார். "ஜுரம் அடிக்கும்போது விரதம் - உபவாஸம் இல்லாவிட்டால் தோஷமில்லை" என்று வாதிட்டுப் பார்த்தார்.

இது ஔஷதம் செய்தார். தானே? ஆகாரம் இல்லையே?" என்று அஸ்திரப் பிரயோகம் பெரியவா 

அருகிலிருந்த சிஷ்யனிடம், "டாக்டர் கொடுத்தது ஔஷதம். நான் பரம ஔஷதத்தில் இருக்கேன்!"என்று மெல்லிய குரலில் தட்டுத் தடுமாறிக் கூறினார்.

மானேஜருக்குப் புரியவில்லை. என்று கூறிப் புரியவைத்தார்கள் பெரியவாள். "லங்கணம் பரம ஔஷதம்னு சொல்லியிருக்கே!" 

மறுநாள் பொழுது விடிகிற வேளை.பெரியவா வழக்கம்போல் எழுந்து,பச்சைத் தண்ணீரில் ஸ்நானம் செய்துவிட்டு அனுஷ்டானங்கள்,பூஜைகளைச் செவ்வனே செய்தார்கள்.

 காய்ச்சல் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டது. உடம்பு,பெரியவா சங்கற்பப்படி இயங்கியது என்பதை நிரூபிக்க ஆயிரத்தெட்டு சான்றுகளைக் கூறலாம்.

"யாருடைய கண்ணிலும் படாத இடத்தில் ஒரு வில்வமரம் இருப்பது, ஹிந்தி பண்டிட்டுக்கு மட்டும் தெரியும்- என்பது,எப்படி பெரியவாளுக்குத் தெரிந்தது."

 "யாருடைய கண்ணிலும் படாத இடத்தில் ஒரு வில்வமரம் இருப்பது, ஹிந்தி பண்டிட்டுக்கு மட்டும் தெரியும்- என்பது,எப்படி பெரியவாளுக்குத் தெரிந்தது."  

("வில்வமரம் இருக்குன்னு பெரியவாளே சொல்லியிருக்கலாமே? ஒங்களை எதுக்குக் கேக்கச் சொன்னா..?"-பண்டிட்டின் மகள்) (அமானுஷ்ய சக்தியை மற்றவர்கள் அறியவிடாமல் மறைத்து வைத்திருப்பதால்தான் பெரியவாளுக்குப் பெருமை-பண்டிட்) சொன்னவர்; 

 

ஸ்ரீமதி மைதிலி,காஞ்சிபுரம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். 

 

ஸ்ரீ சந்திரமௌளீஸ்வரருக்குத் தினந்தோறும் ஸ்ரீருத்ர த்ரிசதீ வில்வார்ச்சனை நடைபெறும். வில்வதளங்கள், வாடிவதங்கியோ,ஓட்டை விழுந்ததாகவோ இருக்கக்கூடாது. மூன்று இலைகள் கொண்ட தளமாகவே இருக்கவேண்டும். 

பெரியவாள் செய்யும் பூஜைக்கான முன்னேற்பாடுகளில், தேவையான வில்வ தளங்களைத் திருத்திக் கொடுப்பது என்பது ஒரு முக்கியமான வேலை. 

அந்த வேலை ஒழுங்காக நடைபெறவேண்டும் என்பதால்,அதெற்கென்று ஒரு பணியாளரை ஒதுக்கி விடுவது வழக்கம். அந்தப் பணியைச் செய்யும் தனிப்பொறுப்பை ஏற்கும் பணியாளரையே 'வில்வம்' என்று சங்கேதப் பெயரால் அழைப்பதும் உண்டு. என்ன காரணத்தினாலோ, வில்வத்தின் வரத்து குறைந்து கொண்டே வந்தது.காஞ்சிபுரத்திலுள்ள வில்வமரங்கள் எல்லாம் பசுமை இழந்து காணத் தொடங்கின. 

 

சிவன் கோவில்களில் வில்வ மரங்கள் இருந்தன என்றாலும், 'சிவன் சொத்து குலநாசம்' என்பதால், கோவில் மரங்களிலிருந்து வில்வக்கிளைகளை ஒடித்துக் கொண்டுவர முடியாது. ஆனால், வில்வம் குறைந்தால்,பெரியவா கேட்பார்களே?. ஒரு நாள் சந்தர்ப்பம் கிடைத்தபோது, "காஞ்சிபுரத்தில் எல்லார் வீட்டு வில்வமரங்களிலும் கிளைகள்தான் இருக்கு; இலைகள் இல்லை" என்று நாசூக்காகத் தெரிவித்தார், ஒரு தொண்டர். "ஹிந்தி பண்டிட்டைக் கேளேன்..." தொண்டர்,'த்ஸொ' கொட்டினார்.'ஹிந்திபண்டிட் என்ன சர்வக்ஞரா? அவருக்கு ஹிந்தி தெரியும்;சம்ஸ்கிருதம், இங்கிலீஷ்,தமிழ் தெரியும். வில்வமரம் தெரியுமா!' பெரியவாளுடைய ஆக்ஞை.எனவே,தவிர்க்க முடியாது. "பண்டிட் ஸ்வாமி, காஞ்சிபுரத்தில் வீடுகளைத் தவிர வேறு எங்கே வில்வமரம் இருக்கா-ன்னு தெரியுமா? உங்களை கேட்கச் சொல்லி பெரியவா உத்திரவு.." அப்பாவுக்கு நெஞ்சு சிலிர்த்தது. பத்து நாட்களுக்கு முன்பு நடந்தது,நினைவுக்கு வந்தது. ஒரு முஸ்லிம் ஆசிரியருக்கு, ஹிந்தி டியூஷன் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார், அப்பா. இடம் - முனிசிபல் பார்க் ! அங்கேதான் இடைஞ்சல் இல்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்ட இடம். அலங்கோலமாக வளர்ந்திருந்த குரோடன்ஸ் செடிகள். தண்ணீர் ஊற்றப் படாததால் வாடிக் கொண்டிருந்த செடிகொடிகள். ஆனால், இது என்ன, பச்சைப்பசேலென்று, புதர் அடர்த்தியாக... - வில்வமரம் ! அட ! பூங்காவில் வில்வமரம்கூட வளர்க்கிறார்களா? பொருத்தமாக இல்லையே? சரி. நமக்கென்ன? இல்லை.ஆழப் பதிந்துவிட்டது. "பண்டிட் ஸ்வாமி...வில்வமரம்.." "இதோ, என்னோட வா, காட்டுகிறேன்..." பூங்காவுக்கு அழைத்துக் கொண்டு போய் வில்வமரத்தைக் காட்டினார்,அப்பா. பின்னர் பல நாள்களுக்கு அந்த மரத்தின் தளங்கள்தாம் சந்திரமௌளீஸ்வரரின் அர்ச்சனைக்குப் பயன்பட்டன. ................................................................................................... இரண்டு நாள்களுக்குப் பிறகு நான் அப்பாவைக் கேட்டேன்; "யாருடைய கண்ணிலும் படாத இடத்தில் ஒரு வில்வமரம் இருப்பது, ஹிந்தி பண்டிட்டுக்கு மட்டும் தெரியும்- என்பது,எப்படி பெரியவாளுக்குத் தெரிந்தது. அப்பா சிரித்தார்,பெரியவாளுடைய பல லீலைகளில் இதுவும் ஒன்று." "இதில் லீலை என்னப்பா இருக்கிறது? ஹிந்தி பண்டிட்டுக்கு நிறைய நண்பர்கள்; பல இடங்களுக்கும் போகிறார்; சிவபூஜை செய்கிறார். அதனால், வில்வமரம் ஓர் இடுக்கில்இருந்தால் கூட, அவர் நினைவில் வைத்துக்கொண்டு விடுவார் - என்ற அனுமானத்தில் பெரியவா சொல்லியிருக்கக்கூடும். இல்லையா?" "இல்லை, மைதிலி, இது ஒரு அபூர்வ ஸித்தி.." "அப்படியானால், முனிசிபல் பார்க்கில் வில்வமரம் இருப்பதைத் தெரிந்து கொண்டிருக்கலாமே? உங்களைக் கேட்கச் சொல்வானேன்?..." என் எதிர்வாதத்தை அப்பா ரசித்தார். "இதோ பார். மைதிலி, முனிசிபல் பார்க் மட்டுமில்லே; இந்த அண்டகோளமே பெரியவாள் அறிவுக்கு உட்பட்டதுதான்.அந்த அமானுஷ்ய சக்தியை மற்றவர்கள் அறியவிடாமல் மறைத்து வைத்திருப்பதால் தான் பெரியவாளுக்குப் பெருமை. முனிசிபல் பார்க்கில் வில்வமரம் இருக்கு...என்று சிஷ்யரிடம் சொல்லியிருந்தால், என்ன ஆகியிருக்கும்? சிஷ்யர், தண்டோரா போடாத குறையாக, எல்லோரிடமும் 'முனிசிபல் பார்க்கை எட்டிப் பார்க்காத பெரியவாளுக்கு அங்கே வில்வமரம் இருக்கு-ன்னு தெரிஞ்சிருக்கு.பெரியவா, ஸித்தபுருஷர் ! ' என்று முழங்கியிருப்பார். அதைத் தவிர்ப்பதற்காக, நான், ஒரு வியாஜம்; காரணம், அந்த உண்மை,என் மூலமாக வரட்டுமே? -என்று, எனக்குக் கௌரவம் கொடுத்துவிட்டு, என்னை முன்னுக்குத் தள்ளிவிட்டு, சுவாமிகள் இந்த சம்பவத்திலிருந்து தன்னை மறைத்துக் கொண்டுவிட்டார்கள். நான் நெஞ்சுருகிப் போனேன்; கண்களை துடைத்துக் கொண்டேன். இமயம் போன்ற தத்துவங்களைப் புரிந்துகொள்கிற வயதில்லை, எனக்கு

"இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே... | perivacharanam | Mahaperiyava Saranam | Kanji Mahan


 "இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே... அவர் எங்கே போயிருக்கார்?" 


சந்யாசியைத் தேடிய சம்சாரி

 


 

"என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா" என்று பெரியவா சொன்னதும் அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி.

எளிமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு

கட்டுரையாளர்  : ரா.வேங்கடசாமி 

தட்டச்சு  : வரகூரான் நாராயணன். 

 

அம்பத்தூரில் வசித்த கம்பெனி தொழிலாளி ஒருவர். அவர் மனைவி ஒரு நோயாளி.அவருக்குப் பிறந்த பிள்ளைகளோ பொறுப்பு இல்லாமல் தறுதலையாக அலைந்தார்கள்.

 

இப்படி சிரமங்களையே சந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு நண்பர் ஒருவர். மகானின் பக்தர். "கருணைக் கடலாக இருக்கும் காஞ்சி மகானிடம் ஒரு தடவை சென்று தரிசித்தபின் அவரது ஆசியைப் பெற்றுக்கொண்டு வா... 

உன் சிரமங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும்"- என்று யோசனை சொன்னார். 

அப்போதிலிருந்து அவரது மனதில் "காஞ்சி மகானைப் பார்க்க வேண்டும்" என்கிற எண்ணம் வேர் விட ஆரம்பித்தது. 

தொழில் சம்பந்தமாக அவர் வெளியூர் செல்லும்போது காஞ்சி வழியாகப் போகும் சந்தர்ப்பம் வரவே,காஞ்சியில் இறங்கி யாரிடமோ வழிகேட்டு வரும்போதுதான் அவரது மனதில் அந்த எண்ணம் தோன்றியது. 

"உலகோர் போற்றிப் புகழும் நிலையில் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக நிற்க, பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும் இந்த சாமியாரைத் தான் எப்படிப் பார்ப்பது" என்கிற எண்ணத்துடன் இவர் அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்தார். 

இவர் எதிர்பார்த்த மாதிரி ஆடம்பரங்களோ..ஆரவாரமோ ஏதும் தென்படவில்லை. "அந்த சாமியார் வேறு எங்கோ போய்விட்டார் போலிருக்கிறது" என்று இவர் நினைத்துக் கொண்டார். 

தனக்கு விடிவுகாலம் பிறக்க அவரிடம் ஆசி பெறலாம் என்று வந்த அவரது கடுகளவு ஆசையும் மறையத் தொடங்கியது. யாரிடம் போய்க்கேட்பது? ஆள் அரவமே இல்லையே என்று அவரது கண்கள் தேடியபோது,ஒரு பெரியவர் மட்டும் அவரது கண்களில் தென்பட்டார். வந்தவர் அவரிடம் கேட்டார். "இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே...அவர் எங்கே போயிருக்கார்?"

 "அவரையா பார்க்க வந்தேள்? யார் சொல்லி அனுப்பினா?" 

இந்தக் கேள்வியும் அவரது அமைதியான முகபாவமும் வந்தவரின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தின. 

அதனால் வந்தவர் தனது குடும்ப சூழ்நிலையையும் தற்போது ஏற்பட்டுள்ள வறுமையான சூழ்நிலையையும் சொல்லி, தன் நண்பர் ஒருவர் இங்கே இருக்கும் சாமியாரைப் பார்த்து ஆசிகள் வாங்கச் சொன்னார் என்றார். 

"அவர் கிட்டே சிரமங்களைச் சொன்னா தீர்வு கிடைக்குமா என்ன?" கேள்வி பிறந்தது.

அவருக்கு வந்தவரோ, 'இந்த வயதான கிழவர் தன்னிடம் ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார்' என்று நினைத்தார். வயதான பெரியவர் தொடர்ந்தார். 

"சிரமம்..சிரமம்னு சொல்றியே..அதை ஏன் நீ படறதா நினைக்கிறே..அந்தப் பாரம் உன்னோடது இல்லையின்னு நீ நினைச்சிட்டா மனம் லேசாயிடுமே..." 

இது எப்படி சாத்தியம் என்று வந்தவருக்கு மனதில் சந்தேகம். 

"அது எப்படி சுவாமி? நான்தானே அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்க வேண்டிருக்கு..

என் கஷ்டங்களை வேறு யார் சுமப்பா?" வயதான பெரியவர் சிரித்தபடியே சொன்னார். 

"இப்போ ஊருக்குப் போறோம்னு வையுங்க..உங்களோட பெட்டி,மூட்டை முடிச்சு எல்லா பாரத்தையும் சுமந்துண்டு போய்த்தானே ஆகணும்? 

அப்ப என்ன பண்றோம்? யாராவது கூலியாள் கிட்டே குடுத்து சுமக்கச் சொல்றோம் இல்லையா? 

அது போலத்தான் நாம படற சிரமங்களை நம்மது இல்லே,பகவான் பார்த்துப்பான்னு பூரண சரணாகதி அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது..

" இதைக் கேட்ட அம்பத்தூர்காரருக்கு கொஞ்சம் மனத்தெளிவு ஏற்பட்டது போல் இருந்தது. 

அவர் வயதான பெரியவரைப் பார்த்து, "பெரியவரே இப்ப எனக்கு கொஞ்சம் மனசு லேசானது போல இருக்கு.

என்பாரம் உன்னோடதுன்னு பகவான்கிட்டே சொல்லிடறது நல்லதுதான்..

நீங்கள் சொல்ற மாதிரி இந்த சாமியார் கிட்ட வந்து என் பாரங்களை இறக்கி வெச்சுட்டுப் போகலாமுன்னு வந்தா, இங்கே அவரைப் பார்க்க முடியல்லே.. எனக்கு உடனே மெட்ராஸ் போயாகணும்...

காத்திருந்து அவரைப் பார்க்க முடியாது.

எனக்கு இன்னமும் நல்ல காலம் வரலே போலத் தோணுது. ஆனா உங்களாண்டை பேசினதுனாலே மனசுக்குக்கொஞ்சம் இதமாக இருக்கு... ஆமா நீங்க யாரு? இதே ஊரா?"என்று கேட்டார். 

வயதான பெரியவர் முகத்தில் சிரிப்பு. 

"என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா" என்று சொன்னதும் அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி. வியப்போடு அந்த எளிமையின் உருவத்தைப் பார்த்தவண்ணம் ஒன்றுமே தோன்றாமல்...

மலைத்து நின்றார். அதுவரை அந்த மனித தெய்வத்திடம் அஞ்ஞானமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சற்றே திரும்பிப் பார்க்க, அந்தத் தவமுனிவரைத் தரிசிக்க ஒரு பெருங்கூட்டமே காத்திருந்தது. 

இத்தனை நேரம் ஒரு மாபெரும் மகானிடம் சர்வ சாதாரணமாகப்பேசி, அவரிடம் யோசனைகள் பெற்றதை எண்ணி அந்தப் பக்தர் வியந்தார். "நமஸ்காரம் பண்ணிக்கிறேன்" என்ற பக்தரை சட்டையை கழற்றும்படி சொன்னார் மகான். 

 

தான் பூணூல் அணியாததால் சட்டையைக் கழற்ற அந்தப்பக்தர் யோசிக்க, மடத்து சிப்பந்தி ஒருவரிடம் சொல்லி அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய் பூணூல் அணிவிக்கச் செய்து ஆசிர்வதித்தார் மகான். 

யாருக்குமே கிட்டாத மாபெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து அவரது இன்னல்கள் யாவும் பனிபோல் விலகின..... 

எளிமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு 

*****

Friday, September 18, 2020

#Periyvacharanam / ஜய ஜய சங்கர/சகல ஜீவராசிகளுக்குள்ளும் அந்த சர்வேஸ்வரன் இருக்கிறான் / Mahaperiyava Saranam

 

பெரியவாள் ஒரு முறை திருக்கோயிலூருக்கு அருகில் உள்ள வசந்த கிருஷ்ணபுரத்தில் முகாமிட்டு இருந்தார்.

 

அது அவர் சாதுர்மாஸ்யவிரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த காலகட்டம். அதனால், தினமும் நீராடிய பிறகு அங்கிருந்து திருவண்ணாமலை சிகரம் இருந்த திசை நோக்கி அவர் பூஜை செய்வது வழக்கம்.

 

அந்த சமயத்தில் ஒருநாள்,வழக்கம்போல அருணைச் சிகரம் நோக்கி ஆராதனை செய்த ஆசார்யர், அதன் பிறகு சற்று நேரம் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.

 

பெரும்பாலும் அருணகிரி வழிபாடு முடிந்ததும் முகாமுக்கு உள்ளே சென்றுதான் தியானத்தில் அமரும் மகாபெரியவர் அன்று எதனாலோ வெளியிலேயே தியானத்தில் ஆழ்ந்தார். அந்த சமயத்தில் எங்கிருந்தோ ஒரு நாய் அங்கே வந்தது.

 

நாய் வந்ததையோ அது என்ன செய்கிறது என்பதையோ யாரும் கவனிப்பதற்கு முன்னால் வெகு வேகமாக மகானின் அருகே சென்ற அந்த நாய், அங்கே வைத்திருந்த கமண்டலத்தில் இருந்த நீரில் வாயை வைத்துக் குடிக்கத் தொடங்கிவிட்டது. சில விநாடிகளுக்குப் பிறகே அதை பார்த்த மடத்துப் பணியாளர்கள் பதறிப் போய் விட்டார்கள்.

 

மகானுக்குப் பக்கத்திலேயே நின்ற அதை விரட்ட, சூ ...சூ....என்று அதட்டினார்கள். ஊஹூம்...அது நகர்ந்தபாடில்லை. கொஞ்சம் உரக்கக் கத்தினால், மகானுடைய தியானம் கலைந்துவிடுமோ என்ற பயமும் எழுந்தது எல்லோருக்கும்.

 

அப்போது கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் கல்லை எடுத்து நாயின் மீது எறிந்தார். அடிபட்ட நாய் ஊளையிட்டு கதறிக்கொண்டே அங்கிருந்து ஓடியது. நாயின் குரலைக் கேட்டு தியானத்தில் இருந்து விழித்த மகாசுவாமிகள் நடந்ததை மற்றவர்கள் சொல்லக் கேட்டு அறிந்து கொண்டார்.

 

இவ்வளவு கவனக்குறைவாக இருந்திருக்கிறீர்களே...ஆசாரம் கெட்டுவிட்டதே...! என்றெல்லாம் மகான் கோபம் கொள்ளப் போகிறார் என்று எல்லோரும் நினைக்க, அதற்கு மாறாக, அன்பொழுகப் புன்னகைத்தார் பெரியவர்.

 

தன்னருகே நின்ற அணுக்கத் தொண்டர்களைப் பார்த்து "இங்கே பக்கத்துல உள்ள அக்கிரஹாரத்துல இருக்கிற எல்லா வீடுகளுக்கும் போய், ஒவ்வொரு வீட்டுல இருந்தும் தரக்கூடிய வகையான உணவு வகைகளை சேகரம் பண்ணிக்கொண்டு வாருங்கள். அதோடு ஒரு வாளியில் சுத்தமான ஜலமும், எடுத்துக்கொண்டு வாருங்கள்!" என்று பணிந்தார்.

 

மகான் கேட்கிறார் என்றதும், எல்லோரும் போட்டிபோட்டுக் கொண்டு உணவுப் பண்டங்களைத் தர, அனைத்தையும் தொண்டர்கள் நிறைய பாத்திரங்களில் கொண்டு வந்தனர்.

 

அனைத்தையும் பார்த்த மகான், "எல்லாவற்றையும் அப்படியே வாசலில் கொண்டுவந்து வையுங்கள்!" என்று உத்தரவிட்டார்.

 

அதுவரை எங்கே போனதென்றே தெரியாத அந்த நாய், இப்போது திரும்ப வந்து, ஆசார்யாளின் பார்வை படும் தொலைவில் நின்றது. "இங்கே வா!" என்பதுபோல் அந்த நாயை கைஜாடைகாட்டி அழைத்தார் மகான். அதைப் புரிந்ததுகொண்டதுபோல், வாலை அசைத்தபடியே பவ்யமாக வந்தது அந்த நாய்.

 

பரமாசார்யாளின் சைகை பாஷையைப் புரிந்து கொண்டு அந்த நாய் வந்ததைப் பார்த்த பக்தர்களும், பணியாளர்களும் வியப்படைந்தனர். நெருங்கி வந்த அந்த நாய், அருகே வருவதற்கு பயந்து சற்று தள்ளி நின்று கொண்டிருந்தது.

 

மகான், தொடர்ந்து அதைக் கூப்பிட்டார். அது தயங்கி, தயங்கி வந்து அருகே அமர்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் ஏதோ மாயம்போல, அந்தப் பகுதியிலுள்ள நாய்கள் அனைத்தும் அங்கே வந்துவிட்டன. படையாக வந்த நாய்களின் கூட்டம், உணவுப் பொருட்களை துவம்சம் செய்யாமல்,பெரியவாளின் உத்தரவுக்கு காத்துக் கொண்டிருப்பதைப்போல அவரையே சுற்றிச் சுற்றி வந்தன. ஒரு நாய்கூட உணவுப் பொருட்களின் அருகே சென்று முகர்ந்து பார்க்கவோ, வாயை வைக்கவோ செய்யவில்லை.

 

நாய் மீது கல் எறிந்தவரை அழைத்த மகாபெரியவா, "எல்லா உணவுப் பொருளையும் அத்தனை நாய்களுக்கும் பகிர்ந்து போடு!" என்று சைகையில் தெரிவித்தார். அவர் உணவை எடுத்துவைக்கும் வரை சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுபோல அத்தனை நாய்களும் கட்டுப்பாடு குலையாமல் நின்றன.

 

அந்த மனிதர் உணவைப் போட்டு முடித்ததும், மகான் நாய்களை நோக்கி சைகை செய்ய, ஒன்று கூட குரைக்கவோ, சண்டை போடவோ செய்யாமல், வரிசையாக நின்று சாப்பிட்டுவிட்டு,பக்கெட்டில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டுச் சென்றன.

 

சகல ஜீவராசிகளுக்குள்ளும் அந்த சர்வேஸ்வரன் இருக்கிறான் என்பதைச் சொல்லாமல் உணர்த்தும் விதமாக மகாபெரியவர் நாய்க் கூட்டத்தை அழைத்து விருந்து கொடுத்த பெருங்கருணையை எண்ணி எண்ணிச் சிலிர்த்துப் போனார்கள் பக்தர்கள்!

 

ஜய ஜய சங்கர!!

ஹர ஹர சங்கர!!

காஞ்சி பெரியவாளின் வாக்கு

 

* காஞ்சி பெரியவாளின் வாக்கு*

 


இந்த வாக்கை கேட்டு தான், மனது அமைதி அடைகிறது.

அவர் சொன்ன இந்த வாக்கு சீக்கிரம் பலிக்கட்டும்..

 இது எனக்கு மட்டுமல்ல இந்து மதத்தை போற்றக் கூடிய அனைவருக்கும்..

 ஒரு ஆசாரசீலர் பெரியவா கிட்ட போய் மிக வினயத்துடன் பெரியவா இப்போ எல்லாம் மதமாற்றம்  அதிகமா ஆயிண்டே இருக்கு போற போக்க பாத்தா நம்ம தேசத்துல ஹிந்துக்கள் கொறஞ்சி மற்ற மதத்தவர் அதிகமா ஆயிடுவா போல இருக்கே. பெரியவா தான் இந்த இக்கட்டான சூழலுக்கு முடிவு காணனும் என்று தன் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். உடனே பெரியவா இப்போ மாட்டும் இல்ல எப்பவுமே இந்த பிரச்சனை நம் பாரத தேசத்துல உண்டு. பகவத் பாதாள் காலத்துல பௌத்த ஜைன உள்பட 72 மதங்கள் இருந்தது. ஆனா பகவத் பாதாள் அனைத்தையும் கண்டனம் செய்து நம் சனாதன தர்மத்தை நிலைக்க செய்தார். நமது சனாதன தர்மமானது யுகங்களை கடந்தது. அதற்க்கு எப்பவுமே அழிவில்லை. க்ஷீணம் ஆவது போல தெரியும் ஆனா எப்பவுமே நமத தர்மம் க்ஷீநிப்பது இல்லை.  

மழைக்காலத்துல பனைமரத்த சுத்தி பல கொடிகள் வளரும். அந்த கொடிகள் பனைமரத்தயே மறைக்குறா போல மரத்து மேல் படர்ந்து வளரும். ஆனா அந்த கொடிகளுக்கு ஆயிசு அதிகம் இல்லை.  

பலமா ஒரு காத்து அடிச்சாளோ, மழை முடிஞ்சு வேயில் காலம் வந்த உடனே மரத்தை மறைத்திருக்குற அந்த கொடிகள் எல்லாம் காஞ்சி கீழே விழுந்துடும். ஆனா பனைமரம் எந்த பாதிப்பும் இல்லாம அப்படியே இருக்கும். அது போலத்தான் நம் சனாதன தர்ம மதமும் பனைமரம் போல ஸ்திரமா இருக்கும். அதற்கு என்னைக்குமே அழிவோ க்ஷீனமோ இல்லை.  

 வீணா கவலைப்படாம உன் ஸ்வதர்மத்துள இருந்து வழுவாம உனக்கு விதிக்கப்பட் நித்ய கர்மாக்களை ஒழுங்காசெய்து வா.அதுவே நீ நம் மதத்துக்கு செய்யுற மிகப்பெரிய உபகாரம். அனைத்தையும் காமாக்ஷி பாத்துண்டே இருக்கா . எப்போ எதை  செய்யனும் அவளுக்கு தான் தெரியும்.#shared#

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...